Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ... மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் ஏப்ரல் 30ல் தண்ணீர் திறப்பு மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரங்கள் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரங்கள் பாலாலயம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2023
03:04

அம்பாசமுத்திரம்: பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்கள் பாலாலயம் நடந்தது.
 
அம்பாசமுத்திரத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில், பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் வழிபட்ட பழமை வாய்ந்த பிரஹந்த நாயகி சமேத கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்., 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதையடுத்து, இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ராஜ கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கான பாலாலய விழா நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு கும்பபூஜை, அபிஷேகம் நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, இரண்டாவது கால யாகசாலை பூஜை நடந்தது. பின்பு, கிழக்கு வாசல் ராஜகோபுரம், மேற்கு வாசல் கோபுரம், சால கோபுரம், விநாயகர், முருகர், கைலாசநாதர், பிரஹந்தநாயகி, காசிவிஸ்வநாதர், அண்ணாமலையார், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், இலந்தையடி நாதர், பாலசுப்பிரமணியர், நலாயிரத்தம்மன், சரஸ்வதி சன்னதி விமானங்களுக்கு பாலாலயம் நடந்தது. பின்பு, கும்பத்தில் இருந்து ராஜகோபுரம், விமானங்களின் சக்தியேற்றப்பட்ட அத்திமர கட்டைகளால் செய்யப்பட்ட ராஜகோபுரங்கள், விமானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனை, பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் ஆலோசனைப்படி , நெல்லையப்பர் கோமதி சங்கர பட்டர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சிகளில் , கோயில் செயல் அலுவலர் கணேஷ்குமார், கணக்கர் சுகன்யாமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆன்மிக அன்பர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar