Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சென்னகேஸ்வர சுவாமி ... பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் விழா : தெற்கு கோபுரம் நடையில் அருள்பாலித்த பகவதி அம்மன்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் விழா : தெற்கு கோபுரம் நடையில் அருள்பாலித்த பகவதி அம்மன்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2023
08:04

பாலக்காடு, : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, திருச்சூர் பூரம் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில், திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் மற்றும் இந்த விழாவை கொண்டாடும் உப கோவில்களில் கொடியேற்றம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் யானைகளின், ஆடை ஆபரண அலங்காரம், முத்துமணி குடைகளின் கண்காட்சி மற்றும் மாதிரி வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பூரம் திருவிழாவை முன்னிட்டு, நெய்தலைக்காவ் பகவதி அம்மன் யானை மீது எழுந்தருளி அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர். பூரம் தினமான இன்று காலை, கணிமங்கலம் சாஸ்தாவின் எழுந்தருளல், பிரஹ்மசுவம் மடத்தில் வரவு, பிரபல இலஞ்சித்தறை மேளம், உபகோவில் மூலவர்கள் யானைகள் அணிவகுப்புடன், வடக்குநாதரை வணங்கும் வைபவம் நடக்கிறது. பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்கள், போட்டி போட்டு நடத்தும் ஆடை ஆபரணங்கள் அணிந்து, அணிவகுத்து நிற்கும் யானைகள் மீதுள்ள முத்துமணி குடை மாற்றம் நிகழ்வு மற்றும் வானவேடிக்கையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருச்சூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar