Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிருத்ர ஜப பாராயணம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி திருகல்யாணத்தில் விவசாயிகள் வழங்கிய அன்னதானம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
மீனாட்சி திருகல்யாணத்தில் விவசாயிகள் வழங்கிய அன்னதானம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

02 மே
2023
05:05

திருப்புவனம்: திருப்புவனம் கண்மாய்கரை அதிகமுடைய அய்யனார் கோயிலில் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருகல்யாணத்தை முன்னிட்டும் விவசாயிகள் அன்னதானம் வழங்கினர். திருப்புவனம் கண்மாயை நம்பி கலியாந்தூர், வெள்ளக்கரை,நெல்முடிகரை, பழையூர், புதூர் விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். வருடம்தோறும் சித்திரை மாதம் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் , மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் அன்று விவசாயிகள் இணைந்து அய்யனாருக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம், அய்யனாருக்கு கிடாவெட்டிதான் பெரும்பாலான பக்தர்கள் விருந்து வழங்குவார்கள் ஆனால் திருக்கல்யாண நாள் என்பதால் அதிகமுடைய அய்யனாருக்கு சைவ விருந்து வழங்குகின்றனர். நேற்று காலை அன்னதான விழாவை முன்னிட்டு அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் கோயில் வளாகத்தில் நான்கு வகை கூட்டு, வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யனாரை வணங்கி அன்னதான விழாவில் பங்கேற்றனர்.

பழையூர் விவசாயி ராஜாமணி கூறுகையில்: கண்மாய் கரை காவல் தெய்வமான அய்யனாருக்கு சித்திரையில் சிறப்பு பூஜைகள் செய்து விருந்து வழங்கப்படும், விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆறு ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடில், ஸ்ரீமத் ராமானுஜர், சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் – சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரியில் ஐந்து நாட்கள் உபன்யாசம் நிகழ்ச்சி துவங்கியது. புதுச்சேரி விட்டல் சேவா ... மேலும்
 
temple news
தர்மபுரி; அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில், ராஜ ... மேலும்
 
temple news
மதுரை; மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. தவிர புளியோதரை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar