பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. பழநியில் மலைக்கோயிலில் (மே.8,ல்) நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 444 கிராம் தங்கமும்,4 ஆயிரத்து 499 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 447, மற்றும் 384 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறும்.