காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சுதா என்பவர் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதா கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமிக்கு வெள்ளி கிரீடத்தை காணிக்கையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.