Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்நத்தம் மகாமுத்து ... சேந்தநாடு திரௌபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சேந்தநாடு திரௌபதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாள் கோயிலில் திருப்பணி மும்முரம்; ஜூன் 1ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சேவுகப்பெருமாள் கோயிலில் திருப்பணி மும்முரம்; ஜூன் 1ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 மே
2023
03:05

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் ஜுன் 1 ல் நடக்கிறது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடக்கிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. கோவில் முன்பாக உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த ஐயனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணப் பூச்சுகள் முடிவுரும் தருவாயில் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 1 ம் தேதி கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராம.அருணகிரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பணி குழுத்தலைவர்: இதற்கு முன்பு 1973 மற்றும் 2001 வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டது. இந்தாண்டு கும்பாபிஷேகத்தை சிறப்புடன் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. உபயதாரர்களின் பங்களிப்பு திருப்பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று 20 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்க பிரமாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar