Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளமடை தர்மராஜா கோவில் குண்டம் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுர கலசங்கள் திருட்டு; இரிடியம் கும்பல் கைவரிசையா
எழுத்தின் அளவு:
கோபுர கலசங்கள் திருட்டு; இரிடியம் கும்பல் கைவரிசையா

பதிவு செய்த நாள்

11 மே
2023
05:05

சோழவந்தான்; சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஸ்ரீ பூர்ணபுஷ்கலாம்பாள் சமேத பூவலிங்க அய்யனார் கோயிலில் கோபுர கலசங்கள் திருடு போயின. இரிடியம் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசையா என போலீசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயிலின் சாலக்கோபுரத்திலும், தனி சன்னதியில் உள்ள விநாயகரின் விமான கோபுரத்திலும் உள்ள கலசங்கள் திருடு போயுள்ளது. பூசாரி பிச்சைக்கண்ணு கூறியதாவது: இக்கோயிலில் நான் கடந்த மே.7ல் இரவு பூஜை செய்து முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன். மறுநாள் வேலை காரணமாக வெளியில் சென்றேன். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு பூஜை செய்து முடித்து விட்டு விநாயகருக்கு பூஜை செய்ய வரும்போது தான் கோபுரத்தின் கலசம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும் கோயிலின் அனைத்து பக்கங்களிலும் சென்று வேறேதும் காணாமல் போயுள்ளதா என பார்த்தேன். அப்போது சாலக்கோபுரத்தில் இருந்த மூன்று கலசத்தில் 1 கலசத்தை காணவில்லை. மற்றொரு கலசம் வளைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கிராமத்தாரிடம் தெரிவித்தேன். அவர்களின் ஒப்புதலோடு காடுபட்டி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார். எஸ். ஐ., குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கலசத்தை திருடியவர்களை தேடிவருகின்றனர். பழமை வாய்ந்த இக்கோயிலை குறிவைத்து மீண்டும் இரிடியம் கும்பல் கலசங்களை திருடி கைவரிசை காட்டியுள்ளதா? என ஆன்மீகவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar