Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையம்மன் சிரசு திருவிழாவில் அருள்வந்து ஆடிய பெண் காவலர்
எழுத்தின் அளவு:
கங்கையம்மன் சிரசு திருவிழாவில் அருள்வந்து ஆடிய பெண் காவலர்

பதிவு செய்த நாள்

16 மே
2023
01:05

வேலுார்; குடியாத்தத்தில் நடந்த கங்கையம்மன் சிரசு ஊர்வலத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

விஷ்ணுவின் அம்சமான பரசுராமன், தன் தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம், கவுண்டன்ய மகாநதி கரையிலுள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கங்கையம்மன் சிரசு, பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டத்தோடு,  லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. சிரசு ஊர்வலம் நடந்த தரணம்பேட்டை முதல், கோபாலபுரம் வரை வீதிகளில், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து  வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை அம்மன் சிரசுவை வழிபட்டனர். பின், ஊர்வலமாக சென்ற சிரசு, கங்கையம்மன் கோவிலில் அலங்கரித்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பாதுகாப்பு பணியில், வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் விழாவிற்கு பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு அடிக்கப்பட்ட உடுக்கை சத்தம் கேட்டு அருள் வந்துவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு ஆடும் அவரை மற்ற போலீசார் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar