Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 60 ஆண்டுக்கு பின் கோவில் திருவிழா; 400 ... காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ஏகாதச ருத்ர ஹோமம் காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ஏகாதச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை கரிய மாரியம்மன் கோவிலில் பொழி எருது விழா
எழுத்தின் அளவு:
கோட்டை கரிய மாரியம்மன் கோவிலில் பொழி எருது விழா

பதிவு செய்த நாள்

18 மே
2023
02:05

மேட்டுப்பாளையம்: கோட்டை கரிய மாரியம்மன் கோவில் விழாவில், பொழி எருது பிடித்து வரும் நிகழ்வு, விமரிசையாக நடந்தது.

காரமடை அருகே பெள்ளாதியில், கோட்டை கரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முப்பெரும் தேவியர்களான கரிய மாரியம்மன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் விநாயகர், முருகன், வைஷ்ணவி தேவி, துர்க்கை அம்மன், உற்சவமூர்த்தி அம்மன், சாமி பாதம், சிம்மவாகனம், சக்திவேல், காவல் தெய்வங்கள், நாகக்கன்னி, ஆதிசிவன், முரசு அடிக்கும் ஜாம்பவான், வீரபாகு மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை முனியப்பன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன.  கோவிலில் உள்ள அம்மன், 33 கிராமங்களில் உள்ள, 130க்கும் மேற்பட்ட ஊர் மக்களின், வழிபடும் தெய்வமாக விளங்குகிறது. இக்கோவில் திருவிழா, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இத்திருவிழா இம்மாதம் ஒன்றாம் தேதி கணபதி ஹோமம் பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவில் சக்தி கம்பம் நடுதல், அம்மன் அழைப்பு, பால்குடம், தீர்த்த குடம் எடுத்தல், பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன.


நேற்று முன்தினம் மதியம் பொழி எருது பிடித்து வரும் நிகழ்ச்சி நடந்தது. டி.ஜி.புதூர், திம்மம்பாளையம், ஜடையம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட, 33 கிராமங்களில் இருந்து, அலங்காரம் செய்த பொழி எருதுகளை, ஜமாப் மேளம் தாளத்துடன், ஊர் கவுடர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு பிடித்து வந்தனர். வரும் வழியில் இளைஞர்கள் எருதுகளுக்கு கோபம் வரச் செய்து, சீறிப்பாயச் செய்தனர். ஒவ்வொரு பொழி எருதுகளையும், கோவிலுக்கு அழைத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, ஊர் மக்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு பிடித்து சென்றனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தலைவர் தாசையன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar