Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் பிராமணர் சங்கம் சார்பில் ... திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை திருச்செந்தூருக்கு காவடியுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர்திருவிழா ; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர்திருவிழா ; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

22 மே
2023
05:05

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மேற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறு நாள் முதல் சிறப்பு திருமஞ்சனமும், சாமி வீதி உலாவும் நடந்து வந்தது. 7 ம் நாள் உற்சவமாக இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 6 மணிக்கு தேர் நிலை நிறுத்துதல் நடந்தது. 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாரதனையுடன் திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. செண்டை மேளம், வாணவேடிக்கை மற்றும் பஜனை குழுவினரின் பக்தி பாடல்களுடன் மாட வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தேர் திருப்பணிக்குழு முன்னாள் தலைவர் குணசேகர், ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி, ஹிந்து சமய அறநிலையத் துறை மேலாளர் மணி, அலுவலர் இளங்கீர்த்தி, பிரம்மோற்சவ விழா உபயதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar