பதிவு செய்த நாள்
23
மே
2023
05:05
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் உள்ள வீரமாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. தொண்டாமுத்தூர், முத்திபாளையத்தில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மூத்த பிள்ளையார் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, புற்று மண் எடுத்தல் நடந்தது. மாலை, மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, முதல் கால வேள்வி நடந்தது. இன்று, இரண்டாம் கால வேள்வி, அம்மன் ஊர்வலம், தீர்த்தக்குடம் ஊர்வலம், மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை, 6:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.