பதிவு செய்த நாள்
23
மே
2023
05:05
மேட்டுப்பாளையம்: சிறுமுகை வீராசாமி நகரில் உள்ள விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, முளைப்பாலிகை பூஜையுடன் துவங்கியது.
சிறுமுகை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள வீராசாமி நகரில், 50 ஆண்டு பழமை வாய்ந்த விஜய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து யாக சாலையில் முளைப்பாலிகை வளர்க்க, பெண்கள் நவதானியங்கள் அடங்கிய தட்டுகளை, பெண்கள் ஊர்வலம் எடுத்து வந்தனர். வருகிற 30-ம் தேதி ஆலாங்கொம்பு பழையூரில் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திடலில் இருந்து, பவானி நதி தீர்த்த குடங்களை, கோவிலுக்கு எடுத்து வர உள்ளனர். அன்று மாலை திருவிளக்கு ஏற்றி, முதல் கால வேள்வி வழிபாடு தொடங்குகிறது. 31ம் தேதி இரண்டாம் கால வேள்வியும், மாலை மூன்றாம் கால வேள்வியும் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி நான்காம் கால யாக வேள்வி பூஜை முடிந்த பின்பு, காலை, 9:15 ல் இருந்து, 10:15 மணிக்குள் விஜய விநாயகர் கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கவுமார மடாலய சிரவையாதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி விழா கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.