எழுமலை: எழுமலை ஸ்ரீ ராமகிருஷ்ணா மண்டபத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞான விநாயகர் மற்றும் திருவள்ளுவர் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீகமலாத்மானந்தர் எழுமலை விவேகானந்தா பள்ளி நிறுவனர் சுவாமி, சிவானந்தா, ஞான தீபம் கல்வி கழக தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருவாசகம், திருக்குறள் பாராயணம் நடைபெற்றது.