வைகாசி பஞ்சமி ; வாராஹி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 03:05
கோவை ; சாய்பாபா காலனி கே. கே .புதூர் சின்னம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் வைகாசி பஞ்சமி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.