திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 03:05
மேலுார்: திருவாதவூர் திருமறை நாதர் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு மே 5 முகூர்த்தகால் ஊன்றப்பட்டு, திருகல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கோயிலில் கொடியேற்றப்பட்டது. அதற்கு முன்பாக திருமறைநாதர்,வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இவ் விழாவில் திருவாதவூர், மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.