Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சடாரியை தலையில் வைப்பது ஏன்? பிரணவத்தின் வடிவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை வைத்த நம்பி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2023
04:05


கடலுார் மாவட்டம் திருநாரையூரில் சவுந்தர்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் பொள்ளாப்பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்தவர் நம்பியாண்டார் நம்பியின் தந்தை. இவர் பிரசாதத்தை விநியோகித்த பிறகே வீடு திரும்புவார். பிரசாதம் எங்கே? என தன் மகன் நம்பி கேட்டால், ‘பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார்’ என சொல்லி வந்தார்.  ஒருநாள் இவர் வெளியூர் போகும் சூழல் ஏற்பட்டது. இதனால் நம்பி அன்று பூஜை செய்தான்.
இதுநாள் வரை தான் கேட்டு வந்த கதை அவனது மனதில் ஓடியது. அதன் விளைவு பிள்ளையாரிடம் பிரசாதத்தை சாப்பிடும்படி மன்றாடினான் நம்பி. ‘அப்பா கொடுத்தால் சாப்பிடுகிறார். நாம் கொடுத்தால் சாப்பிடவில்லையே. ஏதோ தவறு செய்துவிட்டோம்’ என அழுதது அந்தக் குழந்தை. அப்போது தும்பிக்கை நாதன் தன் மீது நம்பிக்கை வைத்த பக்தனின் பிரசாதத்தை சாப்பிட ஆரம்பித்தார். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நம்பி, இந்த அற்புதத்தை எல்லோரிடமும் கூறினான். ஆனால் யாரும் நம்பவில்லை. மறுநாள் மீண்டும் இந்த அற்புதம் நடந்தது. இதை மறைந்திருந்து கவனித்த அவனது தந்தை மெய்சிலிர்த்தார். தன்னை ஆட்கொண்ட பொள்ளாப் பிள்ளையார் மீது, ‘திருவிரட்டை மணிமாலை’ என்னும் பிரபந்தத்தைப் பாடினார் நம்பியாண்டார் நம்பி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar