Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் 50 அடி சாலை ... வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் மலர் முழுக்கு திருவிழா வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம்

பதிவு செய்த நாள்

29 மே
2023
01:05

ஆழ்வார் திருநகரி: நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசன வைபவம் கோலாகமாக நடந்தது.

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 15 நாட்கள் நடைபெறும்.  இந்த ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசன வைபவம் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்களை மங்களாசாசனம் (வரவேற்க) செய்ய எழுந்தருளினார். நவதிருப்பதி பெருமாள்கள் கொடி ஆலவட்டம் பதாகைகள் திருச்சங்குகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக கோயிலின் முன் எழுந்தருளினர். சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அந்த அந்த பெருமாளுக்கான பாசுரங்களை பண் இசைத்துப்பாட பெருமாளிடமிருந்து வந்த பரிவட்டம் மாலை மற்றும் சடரி மரியாதைகளை சுவாமி நம்மாழ்வாருக்கு சாற்றப்பட்டது. நிறைவாக மதுரகவி ஆழ்வார் எழுந்தருள குரு சிஷ்ய பாவத்தில் மரியாதை பெறப்பட்டு மதுரகவி ஆழ்வார் சுவாமி நம்மாழ்வாரை பிரதஷ்ணமாக வர அனைவரும் கோயிலுக்குள் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் வீதிஉலா கண்டருளினார். ஜீயர்கள் மற்றும் ஆச்சார்ய பெருமக்களின் பிரபந்தக் கோஷ்டி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar