Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருக்குமடை ஐயனார் கோயிலில் புரவி ... சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுர ஆதீன பட்டன பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; போலீசார் குவிப்பு
எழுத்தின் அளவு:
தருமபுர ஆதீன பட்டன பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; போலீசார் குவிப்பு

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2023
02:06

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுர ஆதீன கர்த்தர் இன்று இரவு பட்டனபிரவேசம் மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால்  360க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு  பணியில்  ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா ஆதீன குருமுதல்வர் குருபூஜைவிழா, ஆதீனகர்த்தர் பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் திருவிழாவாக  ஆதீனகர்த்தர் பட்டணபிரவேசம் செய்யும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இதில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்று  ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பால்  கடந்த வருடம் பல்லக்குதூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதித்ததற்கு இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு தருமபுர ஆதீனகர்த்தரின் பட்டணபிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டணப்பிரவேசம் விழா இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன மடத்தை சுற்றி 360க்கும் மேற்பட்டட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar