Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரிருளை நீக்க வந்த ஜோதி; வள்ளலார் ... வனவாராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி பூஜை வனவாராகி அம்மன் கோயிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மீண்டும் வழிபாட்டுக்கு திறப்பு
எழுத்தின் அளவு:
‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மீண்டும் வழிபாட்டுக்கு திறப்பு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2023
10:06

கரூர்: இரு பிரிவினர் பிரச்னையால், ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த கடவூர் அருகில் உள்ள, வீரணம்பட்டி காளியம்மன் கோவில், மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் அருகில் மேலப்பகுதி கிராமம், வீரணம்பட்டியில் உள்ளது காளியம்மன் கோவில். இரு பிரிவினரிடையே வழிபாடு செய்வது தொடர்பான பிரச்னையால், சில நாட்களுக்கு முன்பு கோவில் பூட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினர் இடையே கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி.,சுந்தரவதனம் முன்னிலையில், வீரணம்பட்டி காளியம்மன் கோவில் வழிபாட்டிற்கு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பின், கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவிழாவின் போது, இரு பிரிவினரிடையே சச்சரவுகள் ஏற்பட்டன. பின்னர், அனைத்து தரப்பு மக்களுடைய ஒருமித்த முடிவின் அடிப்படையில், தற்போது கோவில் திறக்கப்பட்டு வழிபாடு  நடக்கிறது. இது அனைத்து ஊர்களுக்கும், முன்னோடியாக  வீரணம்பட்டி கிராமம் திகழும் என்பதில் ஐயமில்லை.  ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். குளித்தலை ஆர்.டி.ஓ., ேஷாபா, சப்–கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே அமைந்துள்ள சுற்றுக்கோவிலில், புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar