Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை, வியாசர்பாடி ரவீஸ்வரர் ... திரௌபதி சமேத தர்மராஜர் கோயில் பிரம்மோற்சவ விழா: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு திரௌபதி சமேத தர்மராஜர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கங்கை அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கங்கை அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2023
06:06

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பானகல் (பகுதியில்) கங்கை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கங்கை அம்மன் திருவிழாவை ஒட்டி அம்மனை சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.பானகல் கங்கை அம்மன் கோயில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை தொடர்ந்து பானகல் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனுக்கு பொங்கல் இட்டும், கோழி ஆடு போன்ற விலங்குகளை பலி கொடுத்தும் மாவிளக்கு ஏற்றி தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பானகல்  கங்கை அம்மன் கோயில் பூதலப்பட்டு-நாயுடு பேட்டை  தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால் ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு வாகன போக்குவரத்தையும் சீர்படுத்தினர். இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பானகல் கங்கை அம்மன் திருவிழாவிற்கு கங்கை அம்மனு க்கு சிவன் கோயில் சார்பில் சாரே பூஜை பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தலைமையில் திருப்பதி எம். எல் .சி. டாக்டர் .சிப்பாய் சுப்ரமணியம் வழங்கினர். முன்னதாக பொன்னாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் மேல தாளங்களுடன் ஊர்வலமாக பூஜை பொருட்களை தலைமீது சுமந்துச் சென்று கங்கை அம்மனுக்கு சாரே சமர்ப்பித்தனர்.


இது குறித்து அஞ்சூரு .தாரக சீனிவாசலு பேசுகையில்.. எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அறிவுரையின் பேரில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் பானகல் கங்கை அமரனுக்கு சாரே சமர்ப்பித்தல் நடைபெற்றதாகவும். இதே போல் தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் என்றார். ஸ்ரீ காளஹஸ்தி தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும்  திருவிழாவின் போதும் தேவஸ்தானம் சார்பில் சாரே சமர்ப்பிக்கப்படும் என்றார்.இந் நிகழ்ச்சியில் சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar