Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்துார் கூத்தாண்டவர் கோவில் ... மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை விழா: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் சேகர்பாபு
எழுத்தின் அளவு:
கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அமைச்சர் சேகர்பாபு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
12:06

வேலுார்: ‘‘தமிழகத்தில், கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் காணிக்கையும் அதிகரித்துள்ளது,’’ என,  ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில்,  கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோவில்கள், அன்னதான திட்டம், அறநிலையத்துறை, மருத்துவமனை செயல்பாடுகள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், ஓதுவார் நியமனம், இலவச திருமண திட்டம், உள்ளிட்ட அறநிலையத்துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில், 68 பேர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 84 பேர் நியமிக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் கடந்த, 12 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த, 180 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கோவில்களின்  பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உண்டியல் காணிக்கை உயர்ந்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணப்படுவதில் வெளிப்படை தன்மை இல்லை என, முன்னாள் முதல்வர் பழனிசாமி  உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அறநிலையத்தறை ஆணையர் முரளிதரன், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar