Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு 3 ... பெரியகுளம் நடராஜருக்கு ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மனநிலை பாதிக்கப்பட்டவர் கைது
எழுத்தின் அளவு:
பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மனநிலை பாதிக்கப்பட்டவர் கைது

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2023
04:06

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இன்று காலை துப்புரவு பணியாளர் வந்து பார்த்த போது, கற்சிலை, மர வாகன சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பழைய பராமரிப்பு ஆவணங்களை மர்ம நபர்கள் எரித்து சேதப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது, 3 அடி உயரமுள்ள முருகன் சிலை, 3 அடி உயரமுள்ள பைரவர் சிலை, 3.5 அடி உயரமுள்ள கருடாழ்வார் மர வாகன சிலை, 4 அடி உயரமுள்ள சிங்க வாகன சிலை, மேலும் கோவிலின் உள்ளே இருந்த அனையா தீப விளக்கு, கோவில் பராமரிப்பு பழைய பதிவேடு எரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து, ஆய்வு செய்ததில், சிலைகளை சேதப்படுத்திய நபர் செட்டிக்குளம் அருகே உள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ்,36, என்பது தெரியவந்தது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar