Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மெய்யான அன்பே தெய்வீகமாகும் தவறான வழியில் சேர்த்த பணம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உள்ளதை சொல்! நல்லதைச் செய்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
05:07


காஞ்சி மஹாபெரியவரின் பக்தை புதுக்கோட்டை ராதா. ஒருமுறை இவர் காஞ்சிபுரம் மடத்திற்கு செல்வதை அறிந்த ராதாவின் மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி ‘பலாமுசு’ (பலாப்பிஞ்சு) இரண்டை கொடுத்து மஹாபெரியவருக்கு சமர்ப்பிக்கச் சொன்னார்.  
காஞ்சி மடத்திற்குச் சென்ற ராதா பழங்களுடன் பலாப்பிஞ்சையும் மஹாபெரியவரின் முன்பு ஒரு தட்டில் வைத்தார். அருகில் நின்ற சீடரான வேதபுரி, ‘‘பெரியவா... புதுக்கோட்டை ராதாமாமியின் வீட்டில் காய்த்த பலாப்பிஞ்சு இது’’ என்றார். அதைக் கையில் எடுத்து பார்த்தபடி, ‘‘பலாமரம் இருக்கா’’ எனக் கேட்டார் மஹாபெரியவர்.
‘‘இல்லை சுவாமி. சந்தையில் தான் வாங்கினோம்’’ என பதிலளித்தார் ராதா. உடனே வேதபுரியிடம்,  ‘‘ஏண்டா... என்ன சொன்னாலும் கேப்பேன்னு நினைச்சியா... பலாப்பிஞ்சு கடையில் வாங்கினதாமே’’ என்றார். வேதபுரியோ தலைகுனிந்தார்.
தெரிந்தால் மட்டும் சொல்லலாம். இல்லாவிட்டால் அமைதியாக இருப்பது நல்லது என்பதை இதன் மூலம் உணர்த்தினார்.  
இதே போல இன்னொரு சம்பவமும் நடந்தது.  ராதா காஞ்சிபுரம் செல்ல இருப்பதை அறிந்த உறவினரான குப்புசுவாமி என்பவர் ‘ஸ்ரீராமஜெயம்’  எழுதிய நோட்டு ஒன்றும், காணிக்கையாக பத்து ரூபாயும் கொடுத்தனுப்பினார். ‘நோட்டை கொடுக்கும் போது பெங்களூரு குப்புசுவாமி நமஸ்காரம் சொல்லச் சொன்னார்’ என சொல்லும்படியும் கூறினார்.  
அன்று கூட்டம் அதிகம் இருந்தது. சில பக்தர்களுடன் மஹாபெரியவர் பேசிக் கொண்டிருந்தார். தயக்கத்துடன் நோட்டை தட்டில் வைத்து விட்டு ராதா வணங்கியபடி நடந்தார்.   
ஓரிரு நிமிடத்தில் நோட்டை கையில் பிடித்துக் கொண்டு, ‘பெங்களூருகாரா யார் இங்கு வந்தது’’ எனக் கேட்டார் மஹாபெரியவர். நோட்டு அட்டையில் இடம் பெற்ற முகவரியைப் பார்த்து தான் கேட்கிறார் என்பதை அறிந்து ஓடி வந்தார் ராதா. ‘என் உறவினர் பெங்களுரு குப்புசுவாமியின் நோட்டு இது. அவர் தன் சார்பாக நமஸ்காரம் சொல்லும்படி கூறினார்’ என்றார் பவ்யமாக.  தயக்கத்தைப் போக்கி விட்டு பலர் முன்னிலையில்  பேச வைத்த மஹாபெரியவரை மீண்டும் வணங்கினார் ராதா.
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்ய மஹாபெரியவரின் அருள் நமக்கு துணைபுரியட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar