குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியா கோவிலில் பூரம் நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2026 10:03
உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், பூரம் நட்சத்திர சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். உடுமலை அருகே குறிஞ்சேரியில், ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியாரை, குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.