காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்ட தினம்; அமர்நாத் யாத்திரை தாற்காலிக நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2023 11:08
ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதன் தினத்தையொட்டி நாளை அமர்நாத் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆக.05-ம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் நாளை அன்றைய தினம் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கபதற்காக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.