Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு புஷ்ய மண்டப ... பழநியில் ஆடி லட்சார்ச்சனை;  சுவாமி வீதியுலா பழநியில் ஆடி லட்சார்ச்சனை; சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை
எழுத்தின் அளவு:
பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
10:08

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகாரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து, புனித நீராடி வழிபாடு செய்தனர். காவிரில் நீர் வரத்து இல்லாததால் கடலில் குளித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும். காவிரிசங்கமத்தில் புனித நீராடுவது பொதுமக்கள் வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசையன்று காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அதன்படி ஆடி அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் முழுவதும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்துள்ளனர். முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து காய்கறிகள், கீரைவகைகள், பச்சரிசி, எள் தர்ப்பணம் கொடுத்து  காவிரி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.பொதுமக்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் பரப்பில்லாததால் ஆபத்தான முறையில் கடலில் குளித்து வருகின்றனர். பூம்புகார் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ... மேலும்
 
temple news
நாகை; நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; மேளதாளம், காளி ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். ராமானுஜர் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar