Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் ... சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

30 ஆக
2023
06:08

சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆனைகட்டி ரோட்டில் தடாகத்தில் மலை மீது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். தினமும் மாலை நேரத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் அருகே நடமாடுவது வழக்கமாக உள்ளது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், காலை, 9.00 மணி முதல் மதியம், 3.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை அடிவாரத்தில் கோயிலின் முன்பு, கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த வாரம் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டுகளின் அருகே நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், படிக்கட்டுகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar