Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்.. நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை தெரியுமா? நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை ...
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடு!
லட்சுமி பிற வடிவமும் சிறப்பும்..
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2012
01:10

அஷ்டலட்சுமி: நவரத்ன மாலை: நவராத்திரி நாட்களில் அஷ்டலட்சுமியரும் மகாலட்சுமியுடன் இணைந்து நவ வடிவினராக தரிசனம் அளிப்பதாக ஓர் ஐதிகம் உண்டு. அந்த சமயத்தில் லட்சுமி தேவியை நவரத்னமாலை பாடித் துதிப்பது மங்களங்கள் யாவும் தரும். நவராத்திரி நாட்களில் நீங்கள் சொல்லி வழிபட எளிதான நவரத்னமாலை துதி ஒன்று இதோ...!

ஆதி லட்சுமி

வெண்மஞ்சள் பட்டுடுத்தி, வெண்தாமரை ஆசனமாய்
வேண்டிய வரமருள வீற்றிருக்கும் ஸ்ரீதேவி!
பண்மலர் மாலையிலே பரிவுடனே மகிழ்ந்து
பலநலன்கள் நல்கிடப் பார்க்கும் விழியழகி!
தேனிருக்கும் மலரினை வண்டு தினம் தேடுதல்போல்
அருள் சுரக்கும் உனையே தினம் நாடி நான் வந்தேன்
மாணிக்க ஒளியே! ஒளிரும் பேரருள் மழையே!
மன்னு புகழ் நீ தருவாய் ஆதிலக்ஷ்மியே வணங்குகிறேன்!

சந்தான லட்சுமி

குழலினில் நறுமலர் குறுக்கினில் வெண்பட்டாடை
இதழோரம் குறுநகை இமையோரம் அருட்பார்வை
அழகிய மழலையைத் திருக்கரத்தால் பற்றி
மூவுலகின் தாயாக வீற்றிருக்கும் கொற்றவனே!
மழலைகள் இரண்டு என் மடியினில் தவழ
மறுக்காது நீயும் மங்கல வரமளிப்பாய்
பூமகளே... பொன்மகளே பூவில் உறை திருமகளே
புஷ்பராகமே.. சந்தானலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

கஜ லட்சுமி

பொற்கலசம் ஏந்திப் பூரித்த ஐராவதங்கள்
பொன்மகளே.. உனக்கு இருபுறமும் வீற்றிருக்க,
நறுமணம் தாங்கும் கமல மலர் இரண்டினை
மலர் மகளே உனது மலர்க்கரம் பற்றியிருக்க
திருவேங்கடன்தன் தங்கத் திருமார்பில்
திருமகளே நீ மகிழ்வுடன் கொலுவிருக்க
வைடூர்ய ஒளியே! வற்றாத அருட்சுடரே
வயிரமனம் அருள்வாய் கஜலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

தன லட்சுமி

அமுதகலசம் தனை வலக்கரம் தாங்கி
குமுத மலரிரண்டை இருகரமும் தாங்கி
பொன் ஆபரணங்கள் அங்கமெலாம் தாங்கி
வஸ்திராபரணம் இடையினில் தாங்கி
பொற்றாமரையில் வீற்றிருக்கும் தேவியே
பொன் முதலாம் சீர்தனங்கள் என்வாழ்வில்
கோடிகோடியாய் குவிய வரமருள்வாய்
கோமேதகமே! தனலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

தான்ய லட்சுமி

ஆற்றோரதென்னை வாழைகம்பு கேழ்வரகு
பாக்கு மரமும் பாங்குடனே செழித்திருக்க
முற்றமெலாம் முத்துக்கள் எனும்படியாய்
முத்தான நவதான்யம் பல்கிப் பெருகிவர
குற்றமொன்றில்லாத உளங்களை நாடித்தேடி
கொற்ற வாழ்வு தனைக் குறையாமல் அருள
வீற்றிருக்கும் வடிவழகே! வேண்டும் வளம் பொழிபவளே
முத்தே! முத்தொளியே! தான்யலக்ஷ்மியே! வணங்குகிறேன்!!

வீர லட்சுமி

எண் கரங்களில் இலங்கிடும் வீர ஆயுதங்கள்
பண் மலர்களில் இளகிடும் நின் பொன்மனம்
சிம்ம வாகனத்தில் புறப்பட்டாய் பவனிவர
பக்தர் உளங்களில் புகுந்திட்டாய் வீரம் தர
வெற்றி மாலை அணிந்தவளே வெற்றி பல அருள்பவளே
போற்றி மாலை புனைந்திட்டேன் தேற்றி எனக்கே அருள்வாய்
கொற்ற வாழ்வு தனை பெற்றவளே தந்தருள்வாய்
நற்பவளக் கொடியே! வீரலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

விஜய லட்சுமி

அன்னம் அருகிருக்க அருளே வடிவெடுத்திருக்க
அங்கம் தங்கமாய் மின்ன அபயம் வலக்கரத்திருக்க
எண்கரங்களோடு கிரீட குண்டலம் மின்ன,
விண்ணுலகும் மண்ணுலகும் ஏத்தி ஏத்தித் தொழ,
அபயம் அபயம் எனப் பணிந்து தொழுவோர்க்கு
ஜெயம் ஜெயம் என அனைத்திலும் ஜெயிக்க வைப்பாய்
நீள் ஆயுள் நிறைசெல்வம் நிகரற்ற நற்குணமருள
நீல மணிச்சுடரே... விஜயலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

வித்யா லட்சுமி

பொற்கரத்தில் புத்தகம் எழுதுகோலுடன்
பூவினில் அமர்ந்து புவியெலாம் ஞானம் அருள
கற்போர் உளம் தனில் கலையாத கல்விதர
கமல மலர் ஆசனத்தில் களிப்புடனே அமர்ந்து
பாருலகில் பெருமைபெற ஆயகலைகள் மொத்தம்
அறுபத்து நான்கும் அடியேனுக்கு அருள
பேறுகள் பதினாறும் குறையாமல் பெறவேண்டி
மரகத ரத்தினமே வித்யாலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

மகா லட்சுமி

ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யங்கள் வேண்டி
ஆதி, சந்தான, கஜ, தன தான்ய லக்ஷ்மி
வீர விஜய வித்யா லக்ஷ்மி என
அஷ்ட லக்ஷ்மிகளை இஷ்டமுடன் பணிந்திட்டேன்.
கஷ்ட வாழ்வுதனைக் களைந்தகற்றி
இஷ்ட சுகங்களை எளிதில் பெற வைப்பாய்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ வகை செய
வைரமணிச் சுடரே! மஹாலக்ஷ்மியே வணங்குகிறேன்.

 
மேலும் நவராத்திரி வழிபாடு! »
temple news
அக்.24 விஜயதசமி திருநாள். இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை ... மேலும்
 
temple news
நவராத்திரி எட்டாம் நாள் (அக்.23) சரஸ்வதி பூஜை. அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமரவைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் ... மேலும்
 
temple news
நவராத்திரி ஏழாம் நாளில்(அக்.22ல்) அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம் ... மேலும்
 
temple news
அக்.21ல் அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபடவேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு உண்டாகும். ... மேலும்
 
temple news
அக்.20ல் அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வவளம் பெருகும். நாளை மதுரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar