Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவங்கள் நீங்கி புண்ணியம் தரும்.. ... காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி உற்சவம்; திணறியது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி உற்சவம்; திணறியது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்

பதிவு செய்த நாள்

30 செப்
2023
03:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்ய நள்ளிரவு 3:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்ட பக்தர்கள் மற்றுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். மதியம் 2 மணி வரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 3:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு நகரங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் மற்றும் தாலுகாவில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar