Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சந்திரகிரகணம்; அக்., 28ல் அழகர்கோவில் ... ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி துலா உற்சவம்; மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் தூய்மைப் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
ஐப்பசி துலா உற்சவம்; மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் தூய்மைப் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

16 அக்
2023
04:10

மயிலாடுதுறை; மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில்  துலாம் மாதமான ஐப்பசி மாதம் முழுவதும்  துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.  இந்த உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். நாளை மறுதினம் ஐப்பசி மாதம் பிறப்பதால் துலா கட்ட காவிரி ஆற்றங்கரை,  பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் தூய்மை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தூய்மை செய்யும் பணியை நகராட்சி சேர்மன்  செல்வராஜ் துவக்கி வைத்தார். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் துலா கட்ட காவேரி பகுதி சமன்படுத்தப்பட்டு அங்கிருந்த குப்பைகள், செடிகள் அகற்றப்பட்டு  தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் நூற்றுக்கணக்கான நகராட்சி ஊழியர்கள்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உற்சவத்தில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மயிலாடுதுறை நீராட வருவார்கள். அதற்காக கர்நாடகா தண்ணீர் கொடுக்காததால் காவிரியில் தண்ணீர் இல்லை என்னும் குறையை போக்கிட  2017ல் நடைபெற்ற மகாபுஷ்கர விழாவின்போது அமைக்கப்பட்ட புஷ்கர தொட்டியில் புனித நீராட போர்வெல்  மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. மீண்டும் அதனை நகராட்சி சார்பில் சீரமைத்து புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் தற்போது  செய்யப்பட உள்ளது. இத்தூய்மை பணியின் போது நகராட்சி கவுன்சிலர்கள்  உடனிருந்தனர்.  பக்தர்களுக்கு உதவிய  நகராட்சி சேர்மன் செல்வராஜ், நகராட்சி  கமிஷனர் சங்கர் ஆகியோருக்கு  மயிலாடுதுறை துலா கட்ட காவிரி வழிபாட்டு குழுவின் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகரபாண்டியன், செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துகொண்டார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்.1., இல் திண்டுக்கல் போலீசார் சார்பில் பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar