Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் ... ஐப்பசி மாத பிறப்பு; பழநி முருகன் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஐப்பசி மாத பிறப்பு; பழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி எனும் அடை மழைக் காலம் பிறந்தது; நீர் நிலைகளை பாதுகாத்தால் நிம்மதியாக வாழலாம்..!
எழுத்தின் அளவு:
ஐப்பசி எனும் அடை மழைக் காலம் பிறந்தது; நீர் நிலைகளை பாதுகாத்தால் நிம்மதியாக வாழலாம்..!

பதிவு செய்த நாள்

18 அக்
2023
12:10

ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள் பெருக்கெடுத்து ஓடும். சித்திரையில் அவ்வாறு இருக்காது. அதனால், இரண்டு காலத்திலும், நதிகளில், போதுமான தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழிபாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும் அமைந்துள்ளன. விஷு என்ற சொல்லுக்கு, புதியது, காட்சி என்றெல்லாம் பொருள் உண்டு. தவமுனிவரான அகத்தியர், தமிழகத்துக்கு தந்த, இரு பெரும் கொடைகள் காவிரியும், தாமிரபரணியும்! அவை, என்றும் புதிதாக, அவர் உருவாக்கிய காலத்தை போல், பெருகி ஓட வேண்டும் என்பதாலேயே, விஷு விழா கொண்டாடப்படுகிறது.

தாமிரபரணி கரையிலுள்ள பாபநாசத்தில், விஷு சிறப்பாகக் கொண்டாடப்படும். சித்திரை விஷுவன்று, திருமணக் கோலத்தில், அகத்தியருக்கு காட்சி தருவர், சிவனும், பார்வதியும். ஐப்பசி விஷுவன்று, இங்கு தீர்த்த வாரி நடக்கும். நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற விழாக்களை ஏற்படுத்தினர், நம் முன்னோர். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்வர். சிவன் கோவில் பாதுகாவலராக இருப்பதால், நந்திக்கு கர்வம் ஏற்பட்டது. அதன் கர்வத்தை போக்கினார், சிவன். இதனால், இங்கு ஓடும் காவிரியின் நடுவில் இருக்கிறது, நந்தி. இந்த தீர்த்தத்தை, இடப தீர்த்தம் என்பர். இடபம் என்றால், காளை அல்லது நந்தி; ஐப்பசி மாதத்தின், 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளும், இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம்.  இந்நாட்களில், தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை நதி, ஐப்பசி மாத அமாவாசையன்று, இங்கு வந்து நீராடி, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இந்நாளில், காவிரியில் நீராடினால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி துலா ஸ்நானத்திற்காக, மயிலாடுதுறை வந்தனர், நாதசர்மா -அனவித்யாம்பிகை தம்பதியர். அவர்கள் வருவதற்குள், 30ம் நாட்கள் ஸ்நானம், முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன், இங்குள்ள மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சென்று வணங்கி, அவ்வூரிலேயே தங்கினர். அன்றிரவு, நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், கார்த்திகை மாதம் முதல் நாள் அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பாக நீராடினாலும் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே, மறுநாள், காவிரியில் மூழ்கி, பாவம் நீங்கப் பெற்றனர் அத்தம்பதியினர். பின், அக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம், மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில், அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு, சிவப்பு சேலை கட்டுகின்றனர். ஐப்பசி விஷுவன்று, உங்கள் ஊரிலுள்ள நீர் நிலைகளை பாதுகாக்க, உறுதியெடுங்கள்; கடவுளின் அன்புக்கு பாத்திரமாகுங்கள்! நீரின்றி அமையாது உலகு..!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar