திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 நாள் சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2023 10:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நான்கு நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருவர். இதனால் பக்தர்கள், 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்வர். இந்நிலையில் இன்று ( 21ம் தேதி) 22 ஆகிய இரு நாட்கள், 23 ஆயுத பூஜை, 24 விஜயதசமி என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்களாக இருப்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் வரும், 24 வரை சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.