கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்; ஞான பீடத்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2023 08:10
திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி தலம் "ஞான பீடம் என்றும் "தெட்சிண திரிவேணி சங்கமம் என்றும் புகழ்பெற்றது. மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். தென் இந்தியாவிலேயே கல்வி தெய்வமான சரஸ்வதி அம்மனுக்கான தனி கோயில் இது தான். கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் திகழ்வார். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.