Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் சரஸ்வதி ... அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா ; பக்தர்கள் தரிசனம் அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப பெருமாள் கோவில் நவராத்திரி திருவிழா கோலாகலம்; யானையூட்டு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
அய்யப்ப பெருமாள் கோவில் நவராத்திரி திருவிழா கோலாகலம்; யானையூட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

23 அக்
2023
11:10

பாலக்காடு; அய்யப்பபெருமாள் கோவில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு கொடுந்திரப்புள்ளி கிராமத்தில் உள்ளது அய்யப்ப பெருமாள் கோவில். இக்கோவில் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாநவமி நாளான இன்று காலை நிர்மால்லிய தரிசனம், சோபான சங்கீதம், 7க்கு யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி , 7.30க்கு பரக்காடு தங்கப்பன் மாரார் தலைமையிலான கலைஞர்களின் பஞ்சவாத்தியம் முழங்க குருவாயூர் இன்ரசென் என்ற யானை உற்சவ மூர்த்தியின் உருவ சிலை ஏந்தி, ஐந்து யானைகளில் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நடந்தன. 10 மணிக்கு சிறப்பு ஜபாபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

10.30 மணிக்கு ஐந்து யானைகளின் அணிவகுப்பில் சதீசன் மாராரின் தலைமையில் கலைஞர்களின் பஞ்சாரி மேளம் என்ற அழைக்கப்படும் செண்டை மேளம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அன்னதானம், அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம், பூக்காவடி, நாதஸ்வரம் என தாளமேள கோஷத்துடன் முத்து மணி குடைகளும் ஆடை அபரணங்களும் அணிந்து அணிவகுத்து நிற்கும் 15 யானைகளின் மீதுள்ள வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை, நிறமாலை என சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திவ்யாலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையடுத்து ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டை மேளம் முழங்க உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. சாமவேத பாராயண நிகழ்வுடன் விழா நிறைவுபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar