Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகர் கோயிலில் தொட்டித் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பாலாலயம்; முதல் கால யாக பூஜை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 அக்
2023
12:10

எழுமலை, எழுமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து கொண்டாடும் முத்தாலம்மன் கோயில் திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. எழுமலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் முத்தாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சப்பர தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாக சிலையெடுப்பிற்காக எடுத்துச் சென்றனர். மேற்குத் தெருவில் செய்யப்பட்ட 10 முத்தாலம்மன் சிலைகள், இ.பெருமாள்பட்டி, நல்லதாதுநாயக்கன்பட்டி, சங்ககவுண்டன்பட்டி, தச்சப்பட்டி, உத்தப்புரம், உத்தப்புரம் மேற்குத் தெரு, காமாட்சிபுரத்திற்கு இரண்டு சிலைகள், ஆத்தங்கரைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இ.கோட்டைப்பட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலைகளை அம்மாபட்டி, இ.கோட்டைப்பட்டி, வடக்கத்தியான்பட்டி எடுத்துச் சென்றனர். நல்லமநாயக்கன்பட்டி நாகமநாயக்கன்பட்டி, சீல்நாயகன்பட்டி பேரையம்பட்டி ஆகிய ஊர்களுக்கு அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் வைத்து இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மதியம் 3:00 மணியளவில் சிலைகளை எடுத்து கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதியில் வைத்தனர். உத்தப்புரத்திற்கான சிலையெடுப்பு மட்டும் 144 தடையுத்தரவு இருந்ததால், மற்ற கிராமங்களில் திருவிழா முடிந்தவுடன் போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர்.

எதிர்சேவை: இதில் எழுமலை முத்தாலம்மன் கோயிலில் இருந்து சப்பரம் எழுமலை - ஆத்தங்கரைப்பட்டி செல்லும் வழியில் உள்ள கண்மாய் கழுங்கு அருகில் கொண்டு வந்தனர். எழுமலை மற்றும் ஆத்தரங்கரைப்பட்டி முத்தாலம்மன் சிலைகளுடன் பொதுமக்கள் எதிர் சேவை நிகழ்ச்சி நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. ரம்யாபாரதி, எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகக்குழுவினர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசம் கும்பமேளாவில் இதுவரையில் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அனந்த சரஸ் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  வரதராஜ பெருமாளுடன் 7 முறை ... மேலும்
 
temple news
திருப்பூர்; கதித்தமலை ஸ்ரீவெற்றிவேலாயுதசாமி கோவிலில் நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; ஓமன் நாட்டில், தைப்பூசத்தையொட்டி, பேரூர் சதய விழா குழுவினர், திருமுருக பெருவிழா தமிழ் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஆந்திர துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar