Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்; பழநி முருகன் ... தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
550 ஆண்டுகளாக குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைக்கிறோம்: அமித்ஷா நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
550 ஆண்டுகளாக குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைக்கிறோம்: அமித்ஷா நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 அக்
2023
05:10

ஐதராபாத்: கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் ராமருக்கான பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை டிச.,3ல் நடக்கிறது. இதற்காக ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்), காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியோ, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியோ எந்தவித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் இங்கு வளர்ச்சியை கொண்டுவந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார், சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். தெலுங்கானாவில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிக்க முடிவு செய்துள்ளோம். கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் அடுத்தாண்டு ஜன.,22ம் தேதி ராமருக்கான பிரமாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அதனை திறந்து வைத்து தரிசனம் செய்ய உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar