Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல நுாறு ஆண்டுகளாக கள்ளழகருக்கு ... கந்த சஷ்டி விழா; காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள் கந்த சஷ்டி விழா; காப்பு கட்டி விரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவக்கம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவக்கம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

13 நவ
2023
12:11

சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை துவங்கியது. சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை நகரில், பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவிற்கான பந்தக்கால் இம்மாதம் 8ல் நடப்பட்டது. தொடர்ந்து, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் விழா துவங்கியது. விழாவில் 17 வரை தினமும் இரவு, மங்களகிரி விமானம்; சந்திர பிரபை; ஆட்டுக்கிடா வாகனம்; நாக வாகனம்; மங்கள கிரி விமானம் ஆகியவற்றில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருகிறார். பிரதான நாளான, 18ல், உச்சி காலத்துடன் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும், 19ம் தேதி இரவு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.

லட்சார்ச்சனையில் பங்கேற்றால் மூலவரை தரிசிக்கலாம்: வடபழனி ஆண்டவர் கோவிலில், மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, லட்சார்ச்சனை திருவிழா நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் மூலவரை தரிசிக்க, இரண்டு பேர் மட்டும், சிறப்பு நுழைவாயிலில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.மேலும், லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், விபூதி, குங்குமம், புஷ்பம், முருகர் படம், எவர்சில்வர் பாத்திரம், முறுக்கு, அதிரசம், லட்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
பாலக்காடு; புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு இன்று கொடியேறின. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
கோவை; நஞ்சப்பா ரோடு, முனியப்ப சுவாமி கோவில் திருவிழா கடந்த 11ம் தேதி அன்று கொடியேற்ற நிகழ்வுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி விஜயேந்திரர், ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar