Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமுருகனுக்கு சந்தன அபிஷேகம்; ... குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்சஷ்டி சூரசம்ஹாரம் கோலாகலம் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்; ஆணவத்தோடு வந்தான் அழிந்தான் சூரன் ..அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்; ஆணவத்தோடு வந்தான் அழிந்தான் சூரன் ..அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

18 நவ
2023
05:11

தூத்துக்குடி: அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டும் விதமாக சூரனை வதம் செய்யும் "சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூரில் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, நவ.,13 ல், யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள், பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர். முருகன் தினமும், யாக சாலையில் எழுந்தருளினார். உச்சி காலத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. சஷ்டி விழாவின் நிறைவாக, சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று 18 ம்தேதி காலை 7 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் துவங்கின. யாகசாலை மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார்; தீபாரதனை நடந்தது. உச்சிகால பூஜைக்குப் பின், சண்முக விலாச மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின், திருவாவடுதுறை கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை சூரசம்ஹாரத்திற்காக கடற்கரையில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன்,  அவனை வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, மணிக்கு, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். சூரனை அழித்து தனது வாகனங்களான சேவலாகவும், மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். கடற்கரையில், இந்நிகழ்ச்சியை கண்ட பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, "கந்தவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்களுடன் பரவசம் அடைந்தனர். கடல் அலைகளை மிஞ்சும் விதமாக, கடற்கரை முழுதும் பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ஜெயந்திநாதர், சந்தோஷ மண்டபத்தில், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். பின், பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு, 108 மகா சக்தி மண்டபத்தில், சாய அபிஷேக ஆராதனை நடந்தது. சூரசம்ஹாரத்திற்கு பின், பக்தர்கள் கடலில் நீராடி விரதம் முடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar