பதிவு செய்த நாள்
29
நவ
2023
10:11
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய, 41 தொழிலாளர்கள், 17 நாள் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட நிலையில், சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள தற்காலிக கோவிலுக்கு சென்று ஆஸி., சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் தோண்டும் பணியின்போது, அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்து, 17 நாட்களாக உள்ளே சிக்கியிருந்த, 41 தொழிலாளர்கள், நீண்ட முயற்சிக்குப் பின், நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, தொழிலாளர்கள், நம்பிக்கையுடன் காத்திருந்த உறவினர்கள், உயிரை பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், பிரார்த்தனையில் ஈடுபட்ட, 140 கோடி மக்கள் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்நிலையில் ஆஸி., சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள தற்காலிக கோவிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.