பதிவு செய்த நாள்
29
நவ
2023
12:11
பம்மல்; தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது.
தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா 24ம் தேதி துவங்கியது. அன்று மஹா கணபதி ஹோமம், தேவி மஹாதிமியம், நவ சண்டி பாராயணம், தீபாராதனா. ஆச்சார்யவர்ணம், முளயிடல்,ப்ரசாத சுத்தி, அஸ்தர கலச பூஜை. ரஷோக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலச பூஜை. வாஸ்து கலசாபிஷேகம், புண்யாஹம், அத்தாழ பூஜைகளை குரு சாஸ்திரிகள் செய்தார். தொடர்ந்து முக்கிய தினமான இன்று காலை, மஹா கணபதி ஹோமம், உஷா பூஜை கலசம். பரி கலசாபிஷேகம், மரப்பாணி, பிரம்ம கலசம் அஷ்டபந்தன ஸ்தாபனம், பிரம்ம கலசாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 7.00 மணிமுதல் 07.50 மணிக்குள் ஸ்ரீ கங்கோத்ரி காளிகாம்பா பீடத்தின் சங்கராச்சாரியார் ஆனந்த ஸ்ரீ விபூஷித் ஸ்வாமி நாராயண தீர்த்தர் முன்னிலையில் திருப்பணித்துரா மனையத்தாட்டு மனா ப்ரம்மஸ்ரீ ஆர்யன் நம்பூதிரி ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.