செஞ்சி: மேல்களவாய் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செஞ்சி அடுத்த மேல்களவாய் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 12ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு வாண வேடிக்கைகளுடன் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.