சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2023 02:11
நாமக்கல் மாவட்டம் மோகார் அசலதீபேஸ்வரர் கோயிலில் தர்மசாஸ்தா என்ற அய்யனார் எழுந்தருளி இருக்கிறார். திருமணக்கோலத்தில் பூர்ணா, புஷ்பகலாவுடன் இருக்கும் சாஸ்தாவின் கையில் சாட்டை உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயிலை ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும். திருமணமாகாதவர்கள் வழிபட்டால் திருமணத்தடை விலகி விரும்பிய மணவாழ்க்கை அமையும். மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது. வாரந்தோறும் திங்களன்று ராகு காலத்தில் (காலை 7:30 - 9:00 மணி) வழிபடுவது விசேஷம். மோகனுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் சாலையில் 20 கி.மீ.,
நேரம்: காலை 6:30 – 12:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி தொடர்புக்கு: 94433 57139