சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் 108 கலசாபிஷேக விழா நடந்தது. நவ. 27 ம் தேதி மாலை 5:30 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை வேதபாராயணம் நடந்தது. காலை 10:30 மணிக்கு மகாபிஷேகமும் 11:35 மணிக்கு 108 கலசாபிஷேகம் தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அருள்தரும் ஐயப்பன் ஆலய அறக்கட்டளை நிர்வாகக்குழு செய்திருந்தது.