திருப்புத்தூரில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா டிச.13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2023 04:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா டிச.13 ல் துவங்குகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கு யோகநிலையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆண்டு தோறும் 6 நாட்கள் சம்பகசஷ்டி விழா நடைபெறும். டிச.13 ல் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் காலை 9:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்குகிறது. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதே போல மாலை 4:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர் யாகம் நடந்து மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். டிச.18 வரை தினசரி காலை, மாலை இருவேளைகளில் ஆறு நாட்களும் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.