நாக்பூரில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; டிச.9 வரை சோமவார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2023 11:11
நாக்பூர், காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடமாநிலங்களில் மேற்கொண்டுள்ள விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக நாக்பூரில் முகாமிட்டுள்ளார்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில மாதங்களுக்கு முன் விஜய யாத்திரை என்ற வடமாநில சுற்றுப்பயணம் துவங்கினார். ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., மாநிலங்களை கடந்து தற்போது மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளார். நாக்பூர் சென்றுள்ள அவருக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் மும்பை நிதி மையம், புனே கல்வி மையம், நாக்பூர் சேவா மையம். பாரதத்தின் வளர்ச்சிக்கு மகாராஷ்டிராவின் இந்த மூன்று மையங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். 1933ல் எங்கள் குருநாதர் ஸ்ரீ மகா பெரியவர் காசிக்கு சென்றுள்ளார். தற்போது நான் காசியில் இருந்து வந்துள்ளேன் என்றார்.நாக்பூரில் உள்ள பகவத்பாத சபாவில் டிச.9 வரை தங்கும் சுவாமிகள் இங்கு கார்த்திகை சோமவார பூஜையையும் மேற்கொள்கிறார்.