வாய்க்காலில் அம்மன் சிலை கண்டெடுப்பு; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2023 11:11
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே ஒரு அடி உயரமுள்ள வெங்கலத்தால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், கோனேரி பாளையம் எல்லைக்குட்பட்ட நரிகரடு குன்று அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மழைநீர் செல்ல வேண்டி வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி மஞ்சுளா, 45, என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது சுமார் ஒரு அடி உயரத்திலான ஐந்து கிலோ எடை கொண்ட வெண்கல சிலை, பீடம் ஆகியவை தனித்தனியாக உடைந்த நிலையில் வாய்க்கால் வெட்டப்பட்டு மண் கொட்டி இருந்த மேட்டில் பார்த்துள்ளார். சிலை பீடம் தனியாகவும், சிலை தனியாகவும் உடைந்த நிலையில் இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலுார் வடக்கு வி.ஏ.ஓ., அகிலன் மற்றும் பெரம்பலுார் பி.டி.ஓ., அறிவழகன் ஆகியோர் இச்சிலை எடுத்துச் சென்று பெரம்பலுார். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.