திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம் தாக்கி மதுரை பக்தர் உயிரிழப்பு; கோயில் நிர்வாகத்தினர் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2023 10:12
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜோதிபாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளார். அவர்கள் அனைவரும்கடலில் புனித நீராடி, , தரிசனத்தை முடித்து விட்டு வந்துள்ளனர். பின், ஜோதிபாஸ் தனது மகனுடன் திருச்செந்தூர் கோயிலின் புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த, எர்த் பைப்பில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பிரசாத் (22) மீது பயந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத்தின் தந்தை மற்றும் காவல் துறையினர் மின்சாரம் தாக்கப்பட்ட பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய இக்கோயிலில், நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது என உயிரிழந்த பக்தரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.