வேல்முருகன் கோயில் கும்பாபிஷேக விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2023 03:12
இளையான்குடி: இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் வேல்முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் புதிதாக வேல்முருகன் கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவு பெற்று கும்பாபிஷேகத்திற்காக நேற்று முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி நடைபெற்றது. இன்று காலை பூர்ணாகுதி முடிந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலை வலம் வந்து, கோவில் கோபுரத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் இளையான்குடி பெரும்பச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.