Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கால ... முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம் முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள் மாயமாகவில்லை: அரசு தகவல்
எழுத்தின் அளவு:
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள் மாயமாகவில்லை: அரசு தகவல்

பதிவு செய்த நாள்

07 டிச
2023
02:12

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நகைகள் குறித்து தாக்கலான வழக்கில், நகைகள் மற்றும் சிலைகள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்படுகின்றன என, தமிழக அரசு தரப்பு தெரிவித்ததால் வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. திருவட்டாறு ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அரசின் அனுமதியின்றி, நகைகள் மற்றும் பாதுகாப்பு அறை அகற்றப்பட்டன. அறையிலிருந்த பொருட்கள் திருடு போயின. திருடுபோன நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தமிழக அரசு தரப்பில், நகைகள், சிலைகள் மாயமாகவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறையின் பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்தின் போது மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. புது கட்டுமானங்கள் அகற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளார்; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 1992ல், தங்க அங்கி உட்பட சில நகைகள் திருடு போயின. இவற்றில் சில நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கிரிமினல் வழக்கு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்தி வழக்கை முடித்து மற்ற நகைகளை மீட்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar