Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
எழுத்தின் அளவு:
கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பதிவு செய்த நாள்

11 டிச
2023
11:12

உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சு

ஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகையானவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலையும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையையும், பொருளாதாரத்தில் தடைகளையும், உடல்நலனில் சங்கடங்களையும் வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்களை வழங்குவார். இக்காலம் பிரபல யோககாலமாக இருக்கும். பல நன்மைகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும்.  ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும்.  அபார ஆற்றல் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், அஸ்தமன வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன்களை வழங்குவார். சங்கடங்கள் விலகும். நெருக்கடிகள் இல்லாமல் போகும். முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலம் முழுமையும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை வெற்றி பெறும் நிலையை உண்டாக்குவார்.  செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், 1 ம் பாதத்தினருக்கு மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். நட்புகளும் உங்களை விட்டு விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலம் யோககாலமாக இருக்கும். இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்தஸ்து உயரும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். உடலில் இருந்த பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 1 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும்  குருபகவான் சஞ்சரிப்பார். 1 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் யோகமான பலன்களை வழங்குவார்.  அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்குவதோடு பொன் பொருள் செல்வாக்கு என்று உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். மே 13, 2025 முதல் 1 ம் பாதத்தினருக்கு யோகத்தை அதிகரிப்பார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.

பொதுப்பலன்
இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சனிபகவானின் சஞ்சாரமும் மிகப்பெரிய யோகத்தை வழங்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் செல்வாக்கு உயரும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் காலமாக இருக்கும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் விலகிப் போன பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பும் உயரும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மரியாதை ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உடலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத்தேடி வருவார்கள். நீங்கள் மேற்கொள்ளும்  முயற்சிகள் யாவும் வெற்றியாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம்.

கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொருளியல் துறை மாணவர்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில வாய்ப்பு உண்டாகும்.

உடல்நிலை
இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்று, பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.

குடும்பம்
தொடர்ந்து வந்த நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும்.

பரிகாரம்; சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்து தீபமேற்ற நன்மை அதிகரிக்கும்.


அஸ்தம்; செல்வாக்கு உயரும்

மனக்காரகன் எனக் கூறப்படும் சந்திர பகவான், வித்யாகாரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.

கோச்சார ரீதியாக ஒவ்வொரு கிரகமும் அவர்கள் எந்த இடத்தில் சஞ்சரிக்கிறார்களோ அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர்கள் ஆகிறார்கள். இதில் சனிபகவான் ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப பலன்களை அளந்து வழங்கக் கூடியவர்.

சனிபகவான் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் ஆற்றலை அதிகரிக்க வைப்பார். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியை உண்டாக்குவார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஓட வைப்பார். கடந்த காலத்தில் இருந்த சங்கடங்களையெல்லாம் விலக்கி வைத்து பொருளாதாரத்தில் உயர்வையும், காரியத்தில் அனுகூலத்தையும், தொழிலில் வளர்ச்சியையும் வழங்குவார். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தையும், வழக்குகளில் வெற்றிகளையும் ஏற்படுத்துவார்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் டிச 20, 2023 -  பிப் 15, 2024 வரை சஞ்சரிக்கும் காலத்திலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 மற்றும், நவ 17, 2025 - மார்ச் 6, 2026 காலத்தில்  நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். இக்காலத்தில் அதிகபட்சமான லாபத்தை அடைய முடியும். உங்கள் கௌரவம் செல்வாக்கு அந்தஸ்து யாவும் அதிகரிக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படும். நட்புகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் தோன்றும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், அதுவரை இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வழக்குகளில் சாதகம் தோன்றும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.  தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், சங்கடங்கள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியாமல் போகும். மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். மே 1, 2024 - மே 13, 2025 ல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். செல்வாக்கு உயரும். பட்டம் பதவி என்ற உங்கள் ஆசை நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். மே 14, 2025 முதல் 10 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால் செய்து வரும் தொழிலில் நெருக்கடிகளும், பார்த்து வரும் உத்தியோகத்தில் பிரச்சினைகளும் தோன்றும். மனதில் சங்கடங்கள் அதிகரிக்கும். வருமானத்தில் தடைகள் உண்டாகும்.

பொதுப்பலன்
சனிபகவான் உங்கள் 6 ம் அதிபதி என்பதால் இக்காலத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடந்த கால சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும்.

தொழில்
தொழிலில் இருந்த சங்கடம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பத்திர எழுத்தர்கள், கலைஞர்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், வெள்ளி, ஜவுளி, வழக்கறிஞர் தொழில் மேன்மையாகும்.

பணியாளர்கள்
அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் விருப்பம் நிறைவேறும். ஊதியம் உயரும். பொறுப்பு அதிகரிக்கும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் நிலையில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகப் பணியில் பதவி உயர்வு ஏற்படும். மே 1, 2024 முதல் குரு பார்வை உண்டாவதால் திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். புதிய நபர்களிடம் ஏப்ரல் 26 2025 வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் குழப்பம் தோன்றும்.

கல்வி
மனக்காரகனும் வித்யாகாரகனும் உங்களை வழிநடத்துவதால், கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். பொதுத் தேர்வில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும்.

உடல்நிலை
6ம் இட சனியால் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். இதுவரை உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். பரம்பரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்
வருமானம் அதிகரிப்பால் குடும்பத்திலிருந்த சங்கடங்கள் விலகும். சொத்து மீதிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாவதால் உங்கள் நிலை உயரும். ஒரு சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெளி வட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

பரிகாரம்; விநாயகருக்கு அருகம்புல், துர்கைக்கு குங்குமம் சாத்தி வழிபட வளம் உண்டாகும்.


சித்திரை; நெருக்கடி விலகும்

சகோதரகாரனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு களத்திரக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
சனி பகவானின் சஞ்சார காலத்தில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ற பலன்களை அவரவரின் கர்ம வினைகளுக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார். சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 6 ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கையும், முயற்சிகளில் வெற்றிகளையும், பகைவர்களை வீழ்த்தும் வலிமையையும், பணவரவையும், நினைத்ததை நடத்தும் ஆற்றலையும் வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளையும், பூர்வீக சொத்துகளில் வம்பு வழக்குகளையும், பிள்ளைகளால் சில சங்கடங்களையும், பணவரவில் நெருக்கடிகளையும் உண்டாக்குவார்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும்  சனி பகவான் தாரா பலத்தால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் யோகபலன்களை வழங்குவார். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகம், போகத்தை அதிகரிப்பார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின்வாங்க வைப்பார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க வைப்பார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். ஏப் 26, 2025 க்கு பிறகு இந்த நிலை மாறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஆரோக்கியம் மேம்படும்.  2,3ம் பாதத்தினருக்கு ஏப் 26, 2025 வரை நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையும் வாய்ப்பையும் தருவார். ஏப் 26, 2025க்கு பிறகு பணவரவில் இருந்த தடைகள் விலகும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் யாவும் நிறைவேறும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை பாக்ய ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் ஜீவன ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிப்பார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின்  செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்புகள் வந்து சேரும். அஷ்டம, ஜீவன ஸ்தான காலங்களில் நெருக்கடிகள் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை பார்வையின் மூலம் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உண்டாக்குவார். மே 14, 2025 முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தோன்றும், பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என்று வாழ்வை வளமாக்குவார்.

பொதுப்பலன்
இக்காலத்தில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சக ஊழியர்களும் ஆதரவு புரிவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.

பெண்கள்
குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணை உங்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவர். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். ஒரு சிலர் கல்வியில் அலட்சியமாக இக்காலத்தில் இருப்பீர்கள். எதிர்காலத்தை நினைத்து, ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் தேர்வில் வெற்றி உண்டாகும். ஒரு சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை
தொடர்ந்து இருந்து வந்த நோய்களில் இருந்து இக்காலத்தில் நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் அவை மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்திய நோய்கள் இக்காலத்தில் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
பெரியோரின் ஆதரவு இக்காலத்தில் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்; குலதெய்வ வழிபாட்டால் உங்கள் குறை தீரும் நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar